தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில், இன்று மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், கீழதட்டப்பாறை மற்றும் மேல தட்டாப்பாறை ஆகிய இடங்களில் தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெடி மருந்துகள் வாங்கி செல்வர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வெடிமருந்து கிடங்குகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வுசெய்த அவர், வெடி மருந்துகளை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே விற்பனை வேண்டும் என்றும், வருவாய் துறையினரிடம் உரிய சான்று பெற்று வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், முன் பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு விற்பனை அவற்றை செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு எஸ்ஐ நம்பிராஜ், தட்டப்பாறை உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ
தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்
