தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில், இன்று மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், கீழதட்டப்பாறை மற்றும் மேல தட்டாப்பாறை ஆகிய இடங்களில் தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெடி மருந்துகள் வாங்கி செல்வர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வெடிமருந்து கிடங்குகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வுசெய்த அவர், வெடி மருந்துகளை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே விற்பனை வேண்டும் என்றும், வருவாய் துறையினரிடம் உரிய சான்று பெற்று வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், முன் பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு விற்பனை அவற்றை செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு எஸ்ஐ நம்பிராஜ், தட்டப்பாறை உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில்
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க தமிழகத்தில்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந் நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ