இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
நேற்று 05.02.2021 நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவிற்கு பொது மக்கள் சென்று வருவதற்கு கடற்படையினரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக சுடடிக்காட்டப்பட்டது.
இதுதொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது எனவும், அதன்பின்னர் தேவையற்ற கெடுபிடிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொரோனா காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ள நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி
