தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அனல் பறக்கிறது. இரண்டு கூட்டணிகளிலும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைப் பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் திமுகவுடன் இந்திய கம்யுனிஸ்ட் நேற்று ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஆறு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது.
அக்கட்சித் தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதாகவும், அதற்கு திமுக இந்திய கம்யுனிஸ்ட்டுக்கு கொடுத்த ஆறு தொகுதியில் நிற்பதாகவும் கூறப்பட்டது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நகர்கிறது. நாங்கள் ஒரு எண்ணிக்கை கேட்டோம். அவர்கள் ஒரு எண்ணிக்கை சொன்னார்கள்.
எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. செயற்குழுவைக் கூட்டி இறுதிமுடிவு எடுக்கப்படும்” என்றார். அப்போது அவரிடம் அதிமுக-பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அது காய்லாங்கடைல போடுற பழைய இஞ்சின். அதெல்லாம் ஓடாது. அக்கு வேறா ஆணி வேறா கழண்டு கிடக்குற கூட்டணி” என பட்டென்று போட்டு உடைத்துவிட்டார்.

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
முதல்-மந்திரி
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட் தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம
