இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விமான வான் சாகச கண்காட்சியின் நிறைவு விழா நேற்று (2021.03.05) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது.
மூன்று தினங்களாக நடைபெற்ற வான் சாகச கண்காட்சி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிகழ்வை இலங்கை விமானப்படை மற்றும் இந்திய விமானப்படை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது
இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்ற கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன அவர்களினால் வரவேற்கப்பட்டார்.
1951 மார்ச் 02ஆம் திகதி ரோயல் விமானப்படையாக நிறுவப்பட்ட இலங்கை விமானப்படை, 1972 மே 22ஆம் திகதி இலங்கை விமானப்படையாக மாற்றப்பட்டது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நிறைவுசெய்யும் மனிதாபிமான நடவடிக்கைக்கு விமானப்படை தனது தீவிர பங்களிப்பை வழங்கியிருந்தது.
விமான வான் சாகச கண்காட்சியை பார்வையிடுவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதமர்
அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
