அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்ல – சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திபின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தாமதப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் முறையான தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற செயல்களை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வெலிக்கட சிறைச்சாலை மறுசீரமைப்பு, மாத்தறை, கோட்டை மற்றும் கண்டி வாகன தரிப்பிட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது உரிய அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சேவைகளை நிறைவேற்ற முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
