ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங்கைக்கு வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோன, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லூ ஸஹொஹியை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இதன்போது, அவர் இலங்கை தூதுவரிடம் சீனாவின் உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
பீஜிங்கில் உள்ள தூதுவருக்கு சீனா தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு, கொவிட்-19 தொற்றின் பின்னரான பொருளாதார நிலைமைகள், செயற்திறன்மிக்க கொவிட் பரவல் கட்டுப்பாடு மற்றும் எதிர்கால உயர்மட்ட விஜயங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு சீனாவின் ஆதரவையும் பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கான சீனாவின் சுற்றுலாத்துறை, வர்த்தகங்கள், கொழும்பு துறைமுக நகர மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலய முதலீடுகள் என்பனவற்றுக்கான ஆதரவையும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
