விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம் தூக்கி எறியுங்கள் என்றுகட்சியினர் ஆவேச முழக்கம் எழுப்பி வந்தனர். ஆனால், வேறு வழியின்றி 6 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய தினம் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், சமூக நீதீயை பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். என் தம்பி இங்கு வர வேண்டியவர். பொறுத்திருந்து பார்ப்போம் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
கமலின் இந்த அழைப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசிக கட்சிக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை திமுக கொடுத்திருக்கிறது என்று கமலுக்கு பதில் கொடுத்தார் வைகோ.
இதையடுத்து திருமாவளவன், விசிக விருப்பமனு பெறுதலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது‘’திமுக தலைமையிலான கூட்டனி கட்டுக்கோப்பான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் 6 தொகுதிகளுக்கு உடன்பட்டோம்’’ என்றார்.
அவர் மேலும், ‘’புதிய கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுவதை விட பிரபலமான கட்சியில் 6 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை சிறப்பானதாக கருதுகிறோம்’’ என்று தெரிவித்தவர், ‘’மக்கள் நீதி மய்யம் தலைவரின் அழைப்புக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந
தமிழகம் முழுவதும்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத
