சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது சுற்றுலா வேன் மோதியதில் அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த சின்ன தம்பியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டி மற்றும் அவரது சகோதரி செல்வி. இவர்கள் இன்று காலை குல தெய்வ கோயிலுக்கு செல்வதற்காக, பெத்துரெட்டிபட்டி நால்ரோடு பகுதியில் நின்றிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலா வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பாண்டி மற்றும் செல்வி ஆகியோர் மீது மோதியது. பின்னர், அருகில் இருந்த பள்ளத்திற்குள் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
