அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
15-ந் தேதி (அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்கு கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாலையே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். அ.ம.மு.க.விற்கு இந்தத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எங்களது கூட்டணி கட்சியினருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகளை அவர் பணியிடம் மாற்றம் செய்தது அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது. சசிகலா அரசியலுக்கு மீண்டும் வருகைக்காக நான் வற்புறுத்துவேன்.
ஊழல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பண மூட்டைகளை நம்பி நிற்கிறது. ஒரு கட்சி, பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் அது எந்த மாதிரியான முடிவு வரும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும். இதுவரை ஆர்.கே.நகருக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ
அ.தி.மு.க. 
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி
சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங