இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத விடயங்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளதைப் போன்று , பாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
இஸ்லாமிய பாட நூல்களில் எது அடிப்படைவாத விடயம் , எது அடிப்படைவாதமற்ற விடயம் என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது. பல்கழைகத்தினூடாக இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்து அதனூடாக இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
அடிப்படைவாதமென்பது அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது. தாம் பின்பற்றும் மதத்தைப் பற்றி முறையாக புரிந்து கொள்ளாதவர்களே அடிப்படைவாதிகளாவர். மதங்களைப் பற்றி நன்கு அறிந்து அவற்றை பின்பற்றுபவர்கள் அடிப்படைவாதிகளாக இருக்க மாட்டார்கள்.
எனவே இஸ்லாம் பாட நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதைப் போன்று அரசாங்கத்தின் தேவைக்காக அல்லது அரசியல் கட்சியொன்றின் தேவைக்காக மாற்ற முடியாது. இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவை நியமித்து இதற்கான தீர்வை காணுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
