இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத விடயங்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளதைப் போன்று , பாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
இஸ்லாமிய பாட நூல்களில் எது அடிப்படைவாத விடயம் , எது அடிப்படைவாதமற்ற விடயம் என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது. பல்கழைகத்தினூடாக இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்து அதனூடாக இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
அடிப்படைவாதமென்பது அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது. தாம் பின்பற்றும் மதத்தைப் பற்றி முறையாக புரிந்து கொள்ளாதவர்களே அடிப்படைவாதிகளாவர். மதங்களைப் பற்றி நன்கு அறிந்து அவற்றை பின்பற்றுபவர்கள் அடிப்படைவாதிகளாக இருக்க மாட்டார்கள்.
எனவே இஸ்லாம் பாட நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதைப் போன்று அரசாங்கத்தின் தேவைக்காக அல்லது அரசியல் கட்சியொன்றின் தேவைக்காக மாற்ற முடியாது. இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவை நியமித்து இதற்கான தீர்வை காணுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமை
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
