அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து தற்போது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 , அரிசிஅட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது, மக்களை நம்பியே அதிமுக உள்ளது; மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 6 சிலிண்டர் விலை இல்லாமல் வழங்கப்படும் . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று கூறிய நிலையில் இன்று அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டரும், வாஷிங் மிஷினும் அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து ரூ. 835 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சிலிண்டர் விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற
அதிமுக ஒ
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த
சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில்
திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி
தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயி
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்
