அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து தற்போது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 , அரிசிஅட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது, மக்களை நம்பியே அதிமுக உள்ளது; மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 6 சிலிண்டர் விலை இல்லாமல் வழங்கப்படும் . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று கூறிய நிலையில் இன்று அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டரும், வாஷிங் மிஷினும் அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து ரூ. 835 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சிலிண்டர் விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை
