More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது - இந்திய அரசு அறிவிப்பு
ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது - இந்திய அரசு அறிவிப்பு
Mar 23
ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது - இந்திய அரசு அறிவிப்பு

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு, காந்தி அமைதி விருது வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

 



இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-



இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது.



இந்த விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தேர்வு செய்யப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 19-ந் தேதி கூடியது.



அப்போது மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு 2019-ம் ஆண்டுகான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவது என ஒருமனதாக தேர்வு செய்தது. இந்த விருதானது ஓமன் மன்னர் காந்திய வழியில் ஓமன் நாட்டை சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த விருதுக்கு அவர் பொருத்தமானவர் என முடிவு செய்யப்பட்டது.



ஓமன் நாட்டை தனது திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். மேலும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் போது அமைதி முயற்சிகள் மேற்கொள்ள பெரும் ஒத்துழைப்பு வழங்கியவர்.



இந்தியாவில் கல்வி பயின்றவர். இந்திய முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் ஆவார். இதன் காரணமாக ஓமன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு சிறப்புடன் இருக்க ஒரு சிற்பியாக திகழ்ந்தார். இதனால் இரு நாடுகளின் உறவு புதிய உச்சத்தை அடைந்தது.



அத்தகைய சிறப்பு மிக்க மனிதருக்கு இந்த விருது வழங்குவது மிகவும் பொருத்தமாகும். இந்த விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும். இந்த தகவலை இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ளது.



இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப

Sep11

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வ

Mar13

மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட

Mar13

பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்

Feb12

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி

May09

ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ

Jun10

மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் புத

Sep19

தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்

Jan26

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர்

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா

Mar05

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

May29

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல

Jul16

உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள

Mar18

உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 01 (02:35 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 01 (02:35 am )
Testing centres