கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. மேலும் அங்கு கொரோனா வைரசின் 3-வது அலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதனிடையே வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து மாகாண ஆளுனர்களுடன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்தார். மேலும் ஈஸ்டர் விடுமுறை நாட்களான ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் அறிவித்தார்.
5 நாட்களும் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. தேவாலயங்கள் ஈஸ்டர் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங்