இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகிறார். கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். அந்த நேரத்தில் தனது நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியதால், அவர் தனது பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் அவர் இந்தியா வருவதாக. அவருடைய அலுவலகம் நேற்ற அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகிய பின்னர், போரிஸ் மேற்கொள்ள இருக்கும் முதல் சர்வதேச சுற்றுப்பயணம் இதுவாகும்.
மேலும், ஆசிய பொருளாதார கூட்டமைப்பில் உறுப்பினராவதற்காக இங்கிலாந்து விண்ணப்பித்துள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பயணத்தின்போது இருநாட்டுக்கும் இடையே வர்த்தகம், வேலை வாய்ப்பு, பல்வேறு துறைகளில் முதலீடு உள்ளிட்டவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - இங்கிலாந்து மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மை குறித்தும் இந்த பயணத்தின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதி செய்வார்கள் என தெரிகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
