ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 577 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 327 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.4 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 3 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்தது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 88 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும்
சீனாவின் ஷாங்காய் நகரம், நாட்டின் பொருளாதார மையம் மற்
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம