திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்கட்டளைகள் என 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கு முன்பு நடந்த ரெய்டுகளுக்கு வாய் திறக்காத திமுகவின் முக்கிய புள்ளிகள் மௌனம் கலைத்திருக்கிறார்கள். குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.
திமுகவின் நிதி ஆதாரமே வேலு தான். திமுக அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் பணம் வேலு மூலமாகத்தான் வெளியாட்களுக்கு வட்டிக்கு விடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பண மூட்டைகளைக் கொண்டுதான் திமுகவின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் திமுகவின் அடிமடியிலே கைவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
வேலுவிடமிருந்தே வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா ஆகும். இந்த விவகாரத்தில் வேலுவை விட இன்னபிற திமுக வேட்பாளர்கள் தான் அதிக கலக்கத்தில் உள்ளார்களாம். வேலுவின் பணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். செலவு செய்யாவிட்டால் வெற்றிக்கனியை விட்டுத்தந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த
வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
