ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘ஷாகின்-1ஏ’ ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. இது, அணு ஆயுதங்களை 900 கிமீ சுமந்து சென்று தாக்கும். கடந்த மாதமும் இதே போன்ற அணு ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது.
இஸ்லாமாபாத்: கொரோனா பாதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. சீனாவின் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் (68), அவரது மனைவி பஷ்ரா பிபீக்கும் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதியானது. இதனால், இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதித்த 4 நாளில் இம்ரான் கான் தனது வீட்டில் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் இம்ரானிடம் இருந்து சற்று விலகி அனைவரும் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ளனர்.
இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது. நாட்டின் பிரதமரே கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறிலாமா?, கூட்டம் நடத்த வேண்டிய அவசியமிருந்தால், வீடியோ கான்பரன்சிங்கில் நடத்த வேண்டியது தானே என பலரும் பலவாறு விமர்சித்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் இம்ரான் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் போலீசார் வழக்கு பதிய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் கொதித்துள்ளனர்.
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் த
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
