தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ துளசி செடியில் இருந்து தயாரிக்கப்படும் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து ஒன்று கொரோனாவை அழிக்கும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
எனினும் அவர் இதற்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.
இதையடுத்து கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி பேஸ்புக் நிறுவனம் அதிபர் நிகோலஸ் மதுரோ கணக்கை முடக்கியது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கொரோனா பற்றிய தவறான தகவலுக்கு எதிரான எங்கள் கொள்கைகளை மீறியதற்காக அதிபர் நிகோலஸ் மதுரோவின் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை நாங்கள் அகற்றினோம். மேலும் அவர் எங்கள் விதிகளை மீண்டும் மீண்டும் மீறுவதால் நாங்கள் அவரது கணக்கை 30 நாட்களுக்கு முடக்குகிறோம்” என கூறினார்.
முன்னதாக கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், பிரேசில் அதிபர் ஜெயில் போல்சனாரோ ஆகியோரின் கணக்குகளையும் பேஸ்புக் முன்னர் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்