More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன
Mar 24
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருவதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



உலகில் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.



நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற  சுங்கக்  கட்டளைச் சட்டம் மீதான விவாத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,



2018, 2019ஆம் ஆண்டுகளில் எல்லையற்ற அரச வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வரிக் கொள்கைகளை அரசு மாற்றியது. மக்களால் அந்த வரி சுமையை சுமக்க முடியாது போனது. புலிகள்  இருக்கும் தருணத்தில்கூட புறக்கோட்டை கடைத் தொகுதிகள் மூடப்படவில்லை. ஆனால், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டதால் புறக்கோட்டை கடைத்தொகுதி ஒருநாள் மூடப்பட்டது. போராட்டத்தை முடக்குவதற்காக மூன்று கடைகளை அப்போதைய நிதி அமைச்சர் சீல் வைக்க நடவடிக்கையெடுத்திருந்தார்.



எமது அரசாங்கம் அமையப்பெற்றதும் சுங்க வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.தேசிய உற்பத்தியாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பல தீர்மானங்களை எடுத்திருந்தோம். தீர்வை வரியை குறைத்து செஸ் வரியின் மூலம் தேசிய உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துள்ளோம். உலக சனத்தொகையான 7.8 பில்லியனில் 128 மில்லியன் மக்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 27 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியதர வருமானங்களை பெற்றவர்கள் 30 வருடங்களின் பின்னர் குறைந்த வருமானத்தை பெறுபவர்களாக மாறியுள்ளனர். கொவிட் தொற்று உலகப் பொருளாதாரத்துக்கு   இரண்டாம் உலகப் போரைவிடவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



யுனிசெப்பின் அறிக்கையின் பிரகாரம் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளது. ஜனாதிபதியின்  தலைமையின் கீழ் அரசு  பல்வேறு  சலுகைகளை மக்களுக்குப்   பெற்றுக்கொடுத்துள்ளது. வற் வரி குறைக்கப்பட்டதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டது. உழைப்புக்கான வரியையும் குறைத்துள்ளோம். அதேபோன்று வருமான வரி மற்றும் பொருட்களுக்கான வரியையும் குறைத்துள்ளோம். வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் அரச சேவையில் உள்வாங்கியுள்ளோம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

May21

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Feb11

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை

May18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப

Jul16

தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த

May23

மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்

May25

 பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்

Mar09

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு

Jan19

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்

Feb04

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப

Jun30

பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன

Mar31

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்

Jun08

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (15:16 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (15:16 pm )
Testing centres