சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% லிருந்து 6.4%ஆகவும், ஒராண்டுக்கான வைப்பு தொகை வட்டி விகிதம் 5.5% லிருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4% லிருந்து 6.5 % ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பி வருங்கால வைப்பு நிதி, ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி குறைப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய
மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு
இந்தியாவில்
மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத் ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
