களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும்,பிணையில் விடுதலையான குறித்த நபரை காவல்துறையினர் தாக்கியதாக அவரது மனைவி தெரிவித்தார்.
சம்பவத்தில் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் வைத்தியசாலையில் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை அடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நாளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி,
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
