தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார் . ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆதரித்து ஓபிஎஸ் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று ஓபிஎஸ்சை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி போடியில் பிரச்சாரம் மேற்கொண்டார் .
போடி தேவர் சிலை அருகே திறந்த வேனில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக நின்று பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தை முடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடி சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அங்கு தேநீர் விருந்தில் கலந்துகொண்ட அவர் ஓபிஎஸ் அம்மா பழனியம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் ஓபிஎஸ் குடும்பத்துடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஓபிஎஸ் இளையமகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் , ‘எனது அப்பத்தா பாசத்திற்குரிய ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ
தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4
இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க
