தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார் . ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆதரித்து ஓபிஎஸ் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று ஓபிஎஸ்சை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி போடியில் பிரச்சாரம் மேற்கொண்டார் .
போடி தேவர் சிலை அருகே திறந்த வேனில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக நின்று பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தை முடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடி சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அங்கு தேநீர் விருந்தில் கலந்துகொண்ட அவர் ஓபிஎஸ் அம்மா பழனியம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் ஓபிஎஸ் குடும்பத்துடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஓபிஎஸ் இளையமகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் , ‘எனது அப்பத்தா பாசத்திற்குரிய ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால
கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 42 வார்டுகளை திமுக வ
உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ
