கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சித் துண்டு அணிந்து கலந்துகொண்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ்.
திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவைக் கண்டித்து கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினார் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ். அப்போது ஆ.ராசாவின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி அதிமுகவினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “ஆயிரம் கருணாநிதி சேர்ந்தால்கூட தமிழக முதல்வரின் தாய் தவுசாயம்மாளுக்கு ஈடாக முடியாது. அவர் தனது மகனை நல்ல விவசாயியாகவும், மனிதநேயம் மிக்க அரசியல் தலைவராகவும் வளர்த்துள்ளார்.
ஆனால், அவரை ஆ.ராசா கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்தால் ஆ.ராசாவால் எந்த ஊருக்குள்ளும் செல்ல முடியாது” என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நடத்திவைக்கப்பட்ட திருமண நிகழ்வில் விகாஷ் கலந்து கொண்டார். இது கோவை பகுதிகளில் நடக்கும் சில நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
உடல்நலக்குறைவால் மறைந்த
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை
