தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இவர் சூரியன், உழைப்பாளி, வீரா, ராஜமுத்திரை, என் ஆசை ராஜாவே, ராசையா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா, ஹவுஸ்புல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். பின்னர் ஆந்திர அரசியலில் ஈடுபட்டு தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் பிரச்சினை இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது கர்ப்பப்பை ஆபரேசன் செய்து கட்டி அகற்றப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரோஜாவின் கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “ரோஜாவுக்கு இரண்டு ஆபரேசன்கள் நடந்துள்ளன. கடந்த வருடமே இந்த ஆபரேசன் நடக்க வேண்டி இருந்தது. தாமதம் செய்ததால் பாதிப்பு தீவிரமாகி விட்டது. இப்போது பெரிய அளவில் ஆபரேசன் நடந்தது. எல்லோரது பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் நல்லபடியாக ஆபரேசன் முடிந்துள்ளது. இன்னும் 2 வாரங்கள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தயவு செய்து ஆஸ்பத்திரிக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார்.
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி
சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி