இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. 95 வயதான இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்ந்தனர். அங்கு ஆர்.நல்லகண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அம்மருத்துவமனை 'டீன்' டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது
கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சளி உள்ளிட்ட பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆர்.நல்லகண்ணு விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்