இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்று முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகள், தற்போது கொரோனாவின் 2-வது அலை தாக்கி வரும் சூழலில் மேலும் வேகமெடுத்துள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான தடுப்பூசி டோஸ்கள் பயனாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 9 கோடியை கடந்து விட்டது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 9 கோடியே 1 லட்சத்து 98 ஆயிரத்து 673 டோஸ்கள் போடப்பட்டு இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதில் சுகாதார பணியாளர்கள் 89,68,151 (முதல் டோஸ்), 54,18,084 (2-வது டோஸ்), முன்கள பணியாளர்கள் 97,65,538 (முதல் டோஸ்), 44,11,609 (2-வது டோஸ்), 60 வயதுக்கு மேற்பட்டோர் 3,63,32,851 (முதல் டோஸ்), 11,39,291 (2-வது டோஸ்) என லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதைப்போல 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,36,94,487 (முதல் டோஸ்), 4,66,662 (2-வது டோஸ்) பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை போடப்பட்ட டோஸ்களில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்
புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ
