இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்று முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகள், தற்போது கொரோனாவின் 2-வது அலை தாக்கி வரும் சூழலில் மேலும் வேகமெடுத்துள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான தடுப்பூசி டோஸ்கள் பயனாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 9 கோடியை கடந்து விட்டது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 9 கோடியே 1 லட்சத்து 98 ஆயிரத்து 673 டோஸ்கள் போடப்பட்டு இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதில் சுகாதார பணியாளர்கள் 89,68,151 (முதல் டோஸ்), 54,18,084 (2-வது டோஸ்), முன்கள பணியாளர்கள் 97,65,538 (முதல் டோஸ்), 44,11,609 (2-வது டோஸ்), 60 வயதுக்கு மேற்பட்டோர் 3,63,32,851 (முதல் டோஸ்), 11,39,291 (2-வது டோஸ்) என லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதைப்போல 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,36,94,487 (முதல் டோஸ்), 4,66,662 (2-வது டோஸ்) பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை போடப்பட்ட டோஸ்களில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச் தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
