புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கமைய இந்த விடயத்தின் பின்னணியில் உள்ள உண்மை, சமூகத்திற்கு வெளிப்படுத்தப்படும்.
குறித்த எண்ணெய் விவகாரம் பொய் என்றால், அத்தகைய பொய்களை சமூகமயமாக்குவதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் அல்லது இந்த தேங்காய் எண்ணெய்க்கு எதிராக வேறு எந்த சக்தியும் இருக்கிறதா? என்பது தொடர்பாக ஆராயப்படும்.
ஏனென்றால், ஒவ்வொரு நாடுகளிலும் இதுபோன்ற உள்ளூர் உற்பத்தியை நிறுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் கூட நடவடிக்கை எடுத்துள்ளன என்பது எங்களுக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
கதிர்காமம் - தம்பே வீதியில்
நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும் இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
