புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கமைய இந்த விடயத்தின் பின்னணியில் உள்ள உண்மை, சமூகத்திற்கு வெளிப்படுத்தப்படும்.
குறித்த எண்ணெய் விவகாரம் பொய் என்றால், அத்தகைய பொய்களை சமூகமயமாக்குவதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் அல்லது இந்த தேங்காய் எண்ணெய்க்கு எதிராக வேறு எந்த சக்தியும் இருக்கிறதா? என்பது தொடர்பாக ஆராயப்படும்.
ஏனென்றால், ஒவ்வொரு நாடுகளிலும் இதுபோன்ற உள்ளூர் உற்பத்தியை நிறுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் கூட நடவடிக்கை எடுத்துள்ளன என்பது எங்களுக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
உலகநாயகன் கமல
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
