More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • போடியில் மறு வாக்குப்பதிவு …தங்க தமிழ்ச்செல்வனின் பகீர் தகவல்!
போடியில் மறு வாக்குப்பதிவு …தங்க தமிழ்ச்செல்வனின் பகீர் தகவல்!
Apr 17
போடியில் மறு வாக்குப்பதிவு …தங்க தமிழ்ச்செல்வனின் பகீர் தகவல்!

சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இரவு 7 மணிவரை தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சினைகள் நடந்தாலும் பெரியளவில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.



இந்த சூழலில் தங்க தமிழ்செல்வன் தேனி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இதற்கான முடிவு வரும் மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



இந்நிலையில் தேனி ஆட்சியரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், “வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 13 நிமிடங்கள் மின்சாரம் இல்லை. இதனால் சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை. அத்துடன் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதனால் பலர் கல்லூரி வளாகத்திற்குள் வருகிறார்கள். அதனால் ஸ்ட்ராங் ரூம் பக்கம் யாரும் வராமல் பார்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்லூரி பின்பகுதியில் லைட் இல்லை இதுகுறித்து முறையிட்டேன். உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், “எந்தெந்த வாக்குச் சாவடியில், எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற 17C பட்டியல் கொடுக்கப்படும். அதையும் நாங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்த போது போடி தொகுதியின் பூத் நம்பர் 17 A, 197, 280 ஆகிய மூன்று பூத்தில் பதிவான வாக்குகளில் 300 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியபோது, தாமதமாக கணக்கிட்டபோது தவறு நடந்திருக்கலாம். சரிபார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார். ஒருவேளை இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் 3 பூத்களுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள

May23

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,

Aug06

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம

Sep09

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா

Apr19

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Sep29

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

Jul24

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால

Jan21

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Aug04

பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள

Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

Mar12

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல

Apr02

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா

Mar08

அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:35 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:35 pm )
Testing centres