கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுக்க கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சிறுவன் முகக்கவசம் வினியோகம் செய்யும் புகைப்படம் சோக கதையுடன் வைரலாகி வருகிறது.
பணம் இல்லாதவர்களுக்கு புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இலவசமாக முகக்கவசம் வழங்குவதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இதனை தன் தாய் கூறியதால் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதனுடன் வலம்வரும் சோக கதை உண்மையில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பது ஏழு வயதான சிறுவன் ஆகும். இந்த சிறுவன் தனது சகோதரர் உடன் இணைந்து பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வீதியில் நின்று முகக்கவசம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த சிறுவனின் புகைப்படம் பல்வேறு பாகிஸ்தான் வலைதளங்கள் மற்றும் சர்வதேச வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படத்தை செய்தி நிறுவனம் ஒன்று எடுத்து இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் அதனுடன் வலம்வரும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ
பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்
அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982