டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தொடங்கியது. நாடு சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு, நேற்று டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கியது. இது, 3 நாள் மாநாடு ஆகும்.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மாநாட்டை தொடங்கி வைத்தார். போருக்கு எப்போதும் தயாராக இருப்பதற்காக விமானப்படைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முதல் நாள் மாநாட்டில், கிழக்கு லடாக்கில் உள்ள சூழ்நிலை உள்பட நாடு சந்தித்து வரும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சவால்கள் குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாடு சந்திக்கும் எதிர்கால சவால்களை கருத்திற்கொண்டு, விமானப்படையின் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்தும் அதிகாரிகள் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்துகிறார்கள். விமானப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கிறார்கள்.
மாநாட்டில், விமானப்படையின் அனைத்து பிராந்திய தலைமை அதிகாரிகள், அனைத்து முதன்மை அதிகாரிகள், தலைமை இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு
இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ
மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
