இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான 44 வயதான பிரெட்லீ ஒரு பிட்காயினை (தற்போதைய வர்த்தக மதிப்பு ரூ.40 லட்சம்) கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை வாங்க வழங்குவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து பிரெட்லீ தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு இந்தியா எப்போதும் 2-வது வீடு போன்றதாகும். நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத
2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப
