இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான 44 வயதான பிரெட்லீ ஒரு பிட்காயினை (தற்போதைய வர்த்தக மதிப்பு ரூ.40 லட்சம்) கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை வாங்க வழங்குவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து பிரெட்லீ தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு இந்தியா எப்போதும் 2-வது வீடு போன்றதாகும். நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய
காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க
