இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் என்ற அளவில் உள்ளது. அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 647 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்த நிலையில் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என முதலில் முடிவானது. எனினும், இந்த இரு மாகாணங்களை தவிர்த்து பிற மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்தது.
இந்நிலையில், பல்வேறு கல்வி மண்டலங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என கல்வி அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு அமைச்சரவையின் ஊடக செய்தி தொடர்பு அதிகாரி கெஹெலியா ராம்புக்வெல்லா கூறுகையில், கொரோனா பாதிப்பு உயர்வால் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் டியூசன் வகுப்புகளை வரும் 30-ம் தேதி வரை மூடுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத
