டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் மாத்திரம் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், “டெல்லி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே உள்ளன.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என அவர் மேலும் கூறினார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்
முஹம்மது நபியைப் ப
மேற்கு வாங்க மாநிலம், வடக்கு பர்கானாஸைச் சேர்ந்த 11 வயத
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை
தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத