டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் மாத்திரம் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், “டெல்லி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே உள்ளன.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என அவர் மேலும் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
