இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வருகிற விமானங்களுக்கு இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஏற்கனவே தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாக வருகிற அனைத்து வணிக விமான போக்குவரத்துக்கும் குவைத் நேற்று தடை போட்டுள்ளது.
இது குறித்து குவைத் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “24-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் அனைத்து வணிக விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளோம். இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடு வழியாகவோ வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவுக்கு வெளியே குறைந்தது 14 நாட்கள் கழித்திருக்காவிட்டால் அவர்கள் குவைத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது” என கூறி உள்ளார்.
அதே நேரத்தில் குவைத் மக்கள், அவர்களின் குடும்ப உறவினர்கள், வீட்டு பணியாளர்கள் நாட்டில் நுழைய அனுமதி உண்டு. சரக்கு விமான சேவைகளும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் த
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலார ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு 96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
