More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
May 09
கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாசாரத்தில் நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும். அத்துடன் யாருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கட்டாயம் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் உட்பட்ட அமைப்புகள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.



அதில் கோவிட் காரணமாக எதிர்பார்க்காத மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அது எதிர்காலத்தில் உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



கோவிட் நோயாளிகளால் அனைத்து சுகாதாரத்துறை கட்டில்கள் மற்றும் சுகாதார வசதிகளின் பயன்பாடுகள் அதிகரித்து செல்கின்றன. தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனை கட்டில்களுக்காக நோயாளிகள் காத்திருக்கும்போது ஒக்சிசனின் தேவைப்பாடும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.



சிகிச்சைக்காக வீட்டில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உண்மையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் மற்றும் அவர்களை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



இத்தகைய சூழலில், அடுத்த மூன்று வாரங்களில் இறப்புகளின் அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



எனவே மருத்துவமனைகளில் அதிக வசதிகளை ஏற்படுத்துவதும் நாட்டு மக்களில் குறைந்தது 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்துதும் அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தப் பின்னணியில் அவசரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.



2020, அக்டோபர் இல் வெளியிடப்பட்ட கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட அரச வர்த்தமானி அறிவிப்பை மிகக் கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மக்களின் இயக்கங்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.



வீடுகளில் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுவதை கண்காணிக்க உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கட்டில்கள், ஒக்சிசன் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகளை வழங்குவதன் மூலம் நோய் தீர்க்கும் துறையை வலுப்படுத்தவேண்டும்.



பி.சி.ஆர் சோதனை மூலம் கோவிட் தொற்றை கண்டறிவதற்கும், நிலையான மற்றும் தடையற்ற விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதற்கும் நாடு முழுவதும் ஆய்வக சேவைகளை பலப்படுத்த வேண்டும்.



அரசாங்கம் இப்போது செயல்படவில்லை என்றால், அது எதிர்காலத்தில் பொது மக்களுக்கு இன்னும் கடுமையான மற்றும் நீடித்த கஷ்டங்களை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.



(Tw)



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த

Oct21

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர

Apr08

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்

Sep24

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட

Apr08

நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே

Jan11

திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற

Sep25

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள

May02

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக

Sep26

நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட

Oct18

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Mar02

கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய

Mar04

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Mar14

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (00:57 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (00:57 am )
Testing centres