வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
அதனால் எதிரே பயணித்த 4 வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியை விட்டு விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
யாழ். கைதடி பாலத்துக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ - 9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஏ - 9 கண்டி வீதியூடாக யாழ்ப்பாணத்துக்குப் பயணித்துள்ளது. கைதடி பாலத்தைக் கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
பேருந்து தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் மற்றொரு பேருந்தில் தமது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
