வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
அதனால் எதிரே பயணித்த 4 வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியை விட்டு விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
யாழ். கைதடி பாலத்துக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ - 9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஏ - 9 கண்டி வீதியூடாக யாழ்ப்பாணத்துக்குப் பயணித்துள்ளது. கைதடி பாலத்தைக் கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
பேருந்து தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் மற்றொரு பேருந்தில் தமது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
