வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
அதனால் எதிரே பயணித்த 4 வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியை விட்டு விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
யாழ். கைதடி பாலத்துக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ - 9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஏ - 9 கண்டி வீதியூடாக யாழ்ப்பாணத்துக்குப் பயணித்துள்ளது. கைதடி பாலத்தைக் கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
பேருந்து தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.
கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் மற்றொரு பேருந்தில் தமது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
