இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமான சூழலை சமாளிக்க பல்வேறு வெளிநாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி தளவாடங்கள், வென்டிலேட்டர்கள் என பெருமளவில் உதவிகளை குவித்து வருகின்றன.
இவ்வாறு வெளிநாட்டு உதவிகளை பெறுவதையும், அதற்காக மத்திய அரசு பெருமிதம் கொள்வதையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் மத்திய அரசு மீண்டும் மீண்டும் மார்தட்டிக்கொள்வது பரிதாபமாக உள்ளது. மத்திய அரசு தனது கடமையை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ள ராகுல் காந்தி, பல்வேறு நாடுகளில் இருந்து பெற்றுள்ள உதவிகளின் விவரங்களை பொதுவெளியில் அறிவிக்குமாறும் பிரதமர் மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர
லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ
