இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மே மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தலைவர் வித்யாசாகர் கூறுகையில், இந்தியா முழுவதும் அடுத்த வாரம் (மே 3 முதல் மே 5) கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சமடையும் என்பது எங்கள் நம்பிக்கை’ என்றார்.
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ
நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு
ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால்
உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச
