புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தொடக்கத்தில் மக்கள் சரிவர கடைபிடித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எங்கு பார்த்தாலும் திருவிழா போல் பொதுமக்கள் கூட்டம் உள்ளது.
மார்க்கெட், நேருவீதி, காந்தி வீதி, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதால் எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பி வருகிறது. இதை பார்த்தாவது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்ப
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்க
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ
