புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தொடக்கத்தில் மக்கள் சரிவர கடைபிடித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எங்கு பார்த்தாலும் திருவிழா போல் பொதுமக்கள் கூட்டம் உள்ளது.
மார்க்கெட், நேருவீதி, காந்தி வீதி, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதால் எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பி வருகிறது. இதை பார்த்தாவது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
