பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப்புலனாய்வுப்பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பக்வான் சிங், தல்விந்தர் சிங் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று ஜக்ரானில் உள்ள உணவு தானிய சந்தை அருகே பணியில் இருந்தனர்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், பக்வான்சிங், தல்விந்தர் சிங் இருவர் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் குண்டு பாய்ந்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை பிடிக்கவும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.
இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ
‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட
