தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர்.
தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மகேந்திரன், சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் தற்போது கட்சியில் இருந்து விலகும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் இப்படி செய்திருப்பீர்களா? என்று சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை, அவரின் தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
