More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்!
இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்!
May 13
இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்!

கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.



அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



கொரோனா விவகாரத்தில், இந்தியாவின் தொடர் தேவைகளை அடையாளம் காண இந்திய அதிகாரிகளுடனும், சுகாதார நிபுணர்களுடனும் பேசி வருகிறோம். அவர்களுடன் தொடர்ந்து நெருங்கி பணியாற்றி வருகிறோம்.



இந்தியாவுக்கு அமெரிக்க அரசின் நிதி உதவி 10 கோடி டாலர் ஆகும். இதுபோக, தனியார் அமைப்புகள் 40 கோடி டாலர் நிதிஉதவி அளித்துள்ளன.



இதுவரை 6 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



இவற்றில், 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள், 1,500 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 550 நடமாடும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள், 25 லட்சம் என்95 ரக முக கவசங்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் ஆகியவை அடங்கும்.



இவ்வாறு அவர் கூறினாா்.



இதற்கிடையே, அமெரிக்க செனட் உறுப்பினர் மார்க் வார்னர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் சாந்துவை தொடர்பு கொண்டு பேசினார். இந்தியாவுக்கு உதவ உறுதி பூண்டிருப்பதாக அவர் கூறினாா். அவருக்கு இந்திய தூதர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுவரை 2 லட்சத்து 61 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகளை அமெரிக்கா அனுப்பி வைத்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.



இந்தியாவுக்கு எல்லாவகையிலும் உதவுவோம் என்று அமெரிக்க பென்டகன் செய்தித்தொடர்பாளர் பீட்டர் ஹக்ஸ் கூறினார்.



இதற்கிடையே, தமிழ்நாட்டை சேர்ந்தவரும், அமெரிக்கவாழ் தொழிலதிபருமான எம்.ஆர்.ரங்கசாமி கூறியதாவது:-



சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. இந்தியாவுக்கு உதவ 24 மணி நேரமும் நிதி திரட்டி வருகிறேன்.



ஒவ்வொருவரும் அதிகமாக உதவ வேண்டிய நேரம் இதுவாகும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி வரப்போவதில்லை. எனவே, எல்லோரும் அதிக அளவில் உதவ வேண்டும். அதுபோல், இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உதவுங்கள்.



இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனா, மிகவும் ஆபத்தானது. அதை ஒடுக்காவிட்டால், நேபாளம், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவி பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்திய தரப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நிவாரண பொருட்களுக்கு இந்திய அரசு வரிவிலக்கு அளித்தது பாராட்டத்தக்கது.



இவ்வாறு அவர் கூறினாா்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ

Sep28

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

Feb02

அமெரிக்காவில்  கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்

Jan01

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா

Jun26

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர

Sep03

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Oct15

வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை

Feb24

நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட

Mar23

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ

Apr01

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா

Mar12

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன

May30

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்

Jul23

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை

Mar16

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (21:47 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (21:47 pm )
Testing centres