கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
சி.டி.சி.யின் இந்தப் பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேற்று முக கவசம் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஜோ பைடன் கூறுகையில், இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு சிறப்பான தினம். ஏராளமான அமெரிக்கர்களுக்கு இவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுவதில் நாம் பெற்ற அசாதாரண வெற்றிகளால் இது சாத்தியமானது’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் மிக மிக குறைவாகவே இருக்கிறது. எனவே முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் 2 டோசும் போட்டு முடிக்காதவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
2 ஆம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் ப
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
