தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி சென்னையில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று தேவையின்றி வெளியேறியதாக ஆயிரத்து 110 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 969 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை என்ற குற்றத்திற்காக 83 வழக்குகளும் , குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைப்பதற்காக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி பலரும் பைக்குகளில் சுற்றித் திரிந்ததால் இன்றுமுதல் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்
கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்
கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட