புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தினம்தோறும் அங்குள்ள குரங்குகளுக்கு உணவு, பழங்கள் போன்றவற்றை வழங்கி வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அங்குள்ள குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு இன்றி தவித்து வந்தன.
இந்நிலையில், குரங்குகள் கஷ்டப்படுவதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்தக் கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். மேலும் அந்த தண்ணீர் தொட்டி அருகே பழங்கள், உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்து, அதன்மூலம் குரங்குகளுக்கு தினந்தோறும் தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்ல
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்
பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம
