More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா? - டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா? - டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!
May 25
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா? - டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம் அளித்தார்.



டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



பூஞ்சை நோய்களை அவற்றின் நிறம் அடிப்படையில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று வகைப்படுத்துவது குழப்பத்தை உருவாக்குகிறது. ஏனென்றால் ஒரே வகையான பூஞ்சை, வெவ்வேறு நிறத்தில் காணப்படுகிறது. எனவே, நிறத்தின் அடிப்படையில் கூறாமல், பெயர் அடிப்படையில் பூஞ்சையை குறிப்பிடுவதே நல்லது.



ஆக்சிஜன் சிகிச்சைக்கும், கருப்பு பூஞ்சை வருவதற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், வீட்டில் ஆக்சிஜன் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கும் கருப்பு பூஞ்சை வருகிறது. எனவே, இதற்கு உறுதியான தொடர்பு இல்லை.



கொரோனாவைப் போல், கருப்பு பூஞ்சை தொற்றக்கூடிய வியாதி அல்ல. பூஞ்சை வந்தவர்களில் 90 முதல் 95 சதவீதம்பேர், நீரிழிவு நோயாளிகளாகவோ அல்லது ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள். மற்றவர்களிடம் மிக அபூர்வமாகவே கருப்பு பூஞ்சை காணப்படுகிறது.



நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தாக்கும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் உடல் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்துபவர்கள், அதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு மிக கவனமாக ஆபரேஷன் செய்யாவிட்டால், பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும்.



கொரோனா 3-வது அலை, குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ, அதிகமான குழந்தைகளை தாக்கும் என்பதற்கோ ஆதாரம் இல்லை. முதல் இரண்டு அலைகளை எடுத்துக்கொண்டால், ஒரே மாதிரிதான் இருக்கின்றன.



குழந்தைகள் பாதுகாப்பாகவே உள்ளனர். அவர்களை தாக்கினால் கூட லேசானா தொற்றாகவே இருந்தது. வைரசில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், குழந்தைகளை அதிகமாக தாக்க வாய்ப்பில்லை.



இவ்வாறு அவர் கூறினார்.



பேட்டியின் போது உடன் இருந்த மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால், பைசர், மாடர்னா ஆகிய வெளிநாட்டு தடுப்பூசிகளை மாநிலங்கள் பெற மத்திய அரசு வழிவகை செய்து தருவதாக தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun15

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Mar05

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க

Sep28

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த

Jun01

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம

Jan17

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின

May20

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு

Jan27

சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய

Dec28

புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம

Jul06

சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Sep08

மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்

Feb04

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்

Oct01

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:39 am )
Testing centres