மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இளைஞர் மதுராவில் ஆம்புலன்ஸ் ஓட்டிவருகிறார். 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர். முதல் அலையின் போதும், இப்போதும் ஆம்புலன்ஸ் ஓட்டி மக்கள் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் கடந்த 15-ந் தேதி மரணம் அடைந்தார். பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நோயாளிகள் பலரையும் மருத்துவமனை அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் பணியில் இருந்து பாதியிலேயே செல்லவில்லை.
இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே தனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் தந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.
அப்போதும் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பிரபாத் பணிக்குத் திரும்பினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபாத்தின் இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட
