More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குங்கள் – ஆறுமுகம் புண்ணிய மூர்த்தி!
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குங்கள் – ஆறுமுகம் புண்ணிய மூர்த்தி!
May 27
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குங்கள் – ஆறுமுகம் புண்ணிய மூர்த்தி!

கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்சி மன்ற சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதுடன், விசேட கொடுப்பனவையும் வழங்குங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



குறித்த சங்கத்தின் வடமாகாண இணை தலைவர் ஆறுமுகம் புண்ணிய மூர்த்தி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் 2000க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அனைவரும் உள்ளுராட்சி மன்றங்களில் பணியாளர்களாக 3 ஆண்டுகளிற்கு மேல் சேவையில் ஈடுபடுகின்றனர்.

தற்போது உள்ள கொவிட் 19 அச்சுறுத்தல் நிறைந்த சூழலிலும் அவர்கள் தமது சுத்திகரிப்பு பணிகளை அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கொவிட் தடுப்பு ஊசியை அவர்களிற்கு வழங்க முன்வர வேண்டும் என நாங்கள் கோரிக்கை முன் வைக்கின்றோம். 



அத்துடன் அவர்களின் குடும்பங்களிற்கும் குறித்த தடுப்பு ஊசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களிற்கு இலகுவாக தொற்று பரவக்கூடிய சூழல் காணப்படும் நிலையில் தடுப்பூசியை அவர்களிற்கு செலுத்த வேண்டும்.



அத்தடன், நிரந்தர நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடும் ஊழியர்களிற்கான நிரந்தர நியமனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கின்றோம்.



உள்ளுராட்சி மன்றங்களில் பணி புரியும் சுத்திகரிப்பு ஊழியர்கள் கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் கடமையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலையில் அவர்களிற்கு இலகுவாக தொற்று ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது.

அவர்களிற்கு கொவிட் தடுப்பு ஊசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியல்களிற்கு விசேட கொடுப்பனவினையும் வழங்க முன்வர வேணடும் எனவும் நாங்கள் கோரிக்கை முன் வைக்கின்றோம்.



ஏனெனில், மிக முக்கியமான காலப்பகுதியில் அவர்கள் கடமையில் ஈடுபடுகின்றனர். அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில் குறித்த விசேட கொடுப்பனவை அவர்களிற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா

Feb01

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்

Jan22

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ

Jul18

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி

Oct19

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்

Mar12

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத

Feb06

இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்

Apr08

பள்ளிவாசல் ஒன்றின்  நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்  

May02

இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர

Aug27

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Mar29

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்

Oct04

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்

Apr04

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில

Jul27

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 24 (13:27 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 24 (13:27 pm )
Testing centres