கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்து 17 ஆயிரத்து 397 ஆக உள்ளது.
ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,88,782 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 6,20,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், பார்கள், கடைகள், சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், கலச்சாரம் மற்றும் விளையாட்டு மையங்கள் திறக்கலாம் என்றும், நாடு தழுவிய இரவு ஊரடங்கு உத்தரவு மாலை 7 மணிக்கு பதிலாக 9 மணி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ
உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர
