More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்
துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்
May 20
துறைமுக நகர விடயத்தில் தேசப்பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்களின் மௌனம் வேடிக்கையாகவுள்ளது – சாணக்கியன்

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.



கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில்,



கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகங்கள் ஒரு பிரத்தியேக ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினைகள் தலைதூக்கும் போது அதனை மூடிமறைத்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அரசாங்கம் ஏதாவதொரு நாடகத்தை அரங்கேற்றும்.



கொழும்பு துறைமுக நகரத்திற்குள் சர்வதேச பாடசாலை, சர்வதேச வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் இலங்கையின் சாதாரண பிரஜைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சீனர்களின் தேவைக்காகவே இவை உருவாகக்கப்படுகிறது.



கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் தரப்பின் ஒரு சிலர் தேசப்பற்றாளர்களை போல் வீரவசனம் பேசி இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்தார்கள்.



சிங்களே போன்ற அமைப்புக்களும் தேசிய கொடியில் தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என்று தேவையற்ற கருத்துக்களை சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டு வந்தார்கள். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில் தேச பற்றாளர்கள் என வீரவசனம் பேசியவர்கள் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது ஆகவே மக்கள் இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச

Jul04

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி

Feb09

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை

Apr04

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க

Feb23

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத

Mar14

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச

Mar04

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க

Mar31

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக

Oct15

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்

Sep21

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு

Mar14

 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்

Jan20

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Mar28

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட

Oct07

அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (08:24 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (08:24 am )
Testing centres